tamilnadu

img

ஒய்.எஸ்.ஆரின் ஊழலை கண்டுபிடித்த அதிகாரிக்கு கட்டாய ஓய்வு!

விஜயவாடா:
பாஜக பிரமுகர்களான ரெட்டி சகோதரர்கள் மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஆகியோரின் ஊழலைக் கண்டுபிடித்த, ஐஎப்எஸ் அதிகாரி கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டு உள்ளார்.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு,ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில், மணல் குவாரி உள்ளிட்ட சுரங்கப்பணிகளில் ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இதில், கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் களும், ரெட்டி சகோதரர்கள் என்று அழைக்கப்படும் நபர்களுமான ஜனார்த்தன ரெட்டி, சோமசேகர ரெட்டி, கருணாகர ரெட்டி ஆகியோர்சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந் தது. அதுமட்டுமல்ல, இந்த ஊழலில்ஆந்திர முதல்வராக இருந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டிக்கு இருந்த தொடர்பும் அம்பலமானது.


இந்த விஷயங்களை வெளிச்சத் திற்குக் கொண்டு வந்தவர் ஐஎப்எஸ்அதிகாரி கைலோல் பிஸ்வாஸ் ஆவார். இவர்தான், சட்டவிரோத மணல் குவாரிகள், சுரங்கத் தொழில்கள் தொடர்பாக ரெட்டி சகோதரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார். ரெட்டி சகோதரர்களில் ஒருவரான ஜனார்த்தன ரெட்டி, பின்னாளில் கர்நாடக மாநில அமைச்சர் என்ற செல்வாக்குடன் வலம் வந்தவர்.எனினும், அதிகாரி கைலோல் பிஸ்வாஸ் துணிச்சலாக நோட்டீஸ் அனுப்பியதால், அவருக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்தன. கொலை செய்யப்போவதாக அச்சுறுத்தினர். ஒருகட்டத்தில் வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. அதன்பிறகே, பிஸ்வாஸூக்கு அச்சுறுத்தல்குறைந்தது.இந்நிலையில்தான், ஆந்திராவின் புதிய முதல்வராக பதவியேற் றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி, ‘சரியாக பணிபுரியாத அதிகாரிகள்’ என்ற பெயரில் பட்டியல் ஒன்றைத் தயாரித்து, அந்த அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்பியுள்ளார். அவர்களில் கைலோல் பிஸ்வாஸூம் ஒருவராவார். தனது தந்தை ஒய்.எஸ். ராஜசேகரரெட்டி மீது ஊழல் புகார் கூறியதற்கு பழிவாங்கும் வகையிலேயே, பிஸ்வாஸை, ஜெகன்மோகன் ரெட்டி கட்டாய ஓய்வில் அனுப்பியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.